states

img

ராணுவ வீரரின் உயிர் தியாகத்தில் அரசியல் ஆதாயம் தேடிய பாஜக அமைச்சர்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஷுபம் குப்தா. இவர் இந்திய ராணு வத்தில் கேப்டனாக பணியாற்றியவர். கடந்த புதனன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந் தார். அவரது குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச பாஜக அரசு ரூ.50 லட்சம் நிவா ரணம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் ஷுபம் குப்தாவின் குடும் பத்தினருக்கு காசோலையை வழங்க உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் யோ கேந்திர உபாத்யாய் மற்றும் அவரது ஆத ரவாளர்கள் சென்றிருந்தனர். மகனின் பிரிவால் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டு இருந்த அவரது தாயாரின் கைகளில் வலுக் கட்டாயமாக காசோலையை வழங்கிய அமைச்சர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ராணுவ வீரரின் உயிர்த் தியாகத்தில் கூட பாஜக அரசியல் லாபம் தேடுவ தாக காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள் ளன. பாஜக அமைச்சரின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.